mardi 28 novembre 2023

சுரன் போர்.

நானெனும் பெருவாணவம்தனைச் சூரனாய்ச் சிரமேந்தினான்.
ஊனமேயது கேடுதானென ஓதுஞானம் அறிந்திடான்
வானமேயது எல்லையேயென வகுத்துவாட்சி புரிவதாய்
கூனலாய் மனங்கோணலாய்க் கொடுங்கோலனாய் சூரன்மாறினான்;
-அவன் -
ஆணவம்தனை கூறதாக்கவே வேலவன் வேலேந்தியே
ஞானமொன்றிய வேலினால்சூர னாணவம் வதமானதே..
பாரிலேயுள பக்தரும் தமதாணவம் தனைநீக்கவே
பாடமாயொரு போர்நடந்தது பார்த்துநாம் திருந்தவே..
-பொன்னையா இராசா..



Aucun commentaire:

Enregistrer un commentaire