முருகுபதி நல்லூரி னருகிலொரு வீதிவழி
இருபுயமும் எழுமலையாய் இகழுவகை சிரசோடு
இடியெனவே வெடியோசை மனதினிடை திகிலாக
அதனிடையே முழவதிர கொடியதொரு பெருவுருவில்
அசுரரது படைசூழ நடுவிலொரு மலைபோல
கருவிழிகள் கனலாகி எரிலைபோ லனலுமிழ
பெருவுலக அழிவெனவே மனதிலொரு பயமேற
பெருவுருவ சூரனாம் தலைகாட்டிச் சென்றான்.
Aucun commentaire:
Enregistrer un commentaire